பக்கங்கள்

Thursday, November 13, 2014

பிரதமர் மோடியின் குஜராத்

குஜராத் வளர்ச்சி பாதையில் இருப்பதாகச் சொல்லி எல்லா ஊடகங்களும் போட்டி போட்டு செய்தி வெளியிட்டன.

இப்போது வந்த செய்தி ஒன்றைப் பற்றி தெரியப் படுத்துகிறது.




"காந்திநகர்: குஜராத்திலுள்ள அங்கன்வாடிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், பெரும்பாலான பள்ளிகள் மரத்தடியில் நடக்கிறது எனவும் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையை நேற்று (11ஆம் தேதி) குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ''குஜராத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளில் கழிவறை வசதி இல்லை. இங்குள்ள பெரும்பாலான பள்ளிகள் மரத்தடியிலும், தற்காலிக முகாம்களிலும் இயங்கி வருகிறது. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் 2009 மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பலவேறு பள்ளிகளில்  கட்டிட வசதிகள் இல்லை. போதுமான ஆசிரியர்கள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

பஞ்சாயத்து ராஜ் மூலம் 31,545 தொடக்கப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10 மாவட்டங்களில் உள்ள 14,497 தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியதில் 48 பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லை. 56 பள்ளிகளில் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன'' எனக் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment